பதிவு செய்த நாள்
27
மார்
2015
11:03
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக பூஜைகள், வரும் 3௦ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்.,3ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, திருப்பணிக்குழு செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரவிசங்கர் உறுப்பினர் பரசுராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் திருப்பணி கடந்த 2012ல் முதல்வர் ரங்கசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. கோவில் பக்தர்களின் வசதிகேற்ப முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய உற்சுவர் மண்டபம், சுவாமி திருமண மண்படம், கண்ணாடி பள்ளியறை ஆகியவை ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. சுதை வேலைபாடுகள், கோபுரங்கள், கர்ப கிரக விமான ஸ்துாபி கலசம், சொர்ண மயமான ஆனந்த விமான நிலை, பால விநாயகர், பாலசுப்ரமணியர், விமானம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பூஜை கள், வரும் 30ம் தேதி காலை யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.