Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெஷிணா காளிக்கோவிலில் மண்டலாபிஷேக ... பாம்பு புற்றுக்குள் ஆஞ்சநேயர் சிலை! பாம்பு புற்றுக்குள் ஆஞ்சநேயர் சிலை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடல் முழுவதும் சேறு பூசி 4,000 பக்தர்கள் நேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
உடல் முழுவதும் சேறு பூசி 4,000 பக்தர்கள் நேர்த்தி கடன்!

பதிவு செய்த நாள்

01 ஏப்
2015
05:04

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, 4 ஆயிரம் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி ‘சேத்தாண்டி’ வேடமணிந்து நேர்த்திகடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை முன்னிட்டு, கும்பம் எடுத்தல், அலங்கரிக்கப்பட்ட பூதம், காமதேனு, ரிஷபம், குதிரை, மயில்,யானை, சிம்மம் வாகனங்களில் முத்துமாரியம்மன் நகர் வலம் வந்து, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பொங்கல் வைத்தும், பூக்குழி இறங்கியும், அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்தும், கரும்பாலை தொட்டி, பால்குடம் சுமந்து வந்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.  உடலில் அம்மை உட்பட தோல் நோய்கள் வராமல் இருக்கவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நோய் தாக்காமல் இருக்கவும், உடல் முழுவதும் சேறு பூசி, ‘சேத்தாண்டி’ வேடமணிந்து, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கைகளில் வேப்பிலை ஏந்தியபடி,அதிகாலை முதல் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன்களை செலுத்தினர். இதுகுறித்து கமுதி சுரேஷ் கூறுகையில், “அம்மை, தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் இந்நோய் தாக்காமல் இருக்கவும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் அம்மனுக்கு, ‘சேத்தாண்டி’ வேடமணிந்து நேர்த்தி கடன்களை செலுத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்காக, கமுதியில் பிறந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட கட்டாயம் வந்து பங்கு பெறுவது, இக்கோயிலின் சிறப்பு,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar