Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புற்று மாரியம்மன் கோவிலில் ... செல்வமுத்து மாரியம்மன்மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
02:04

திருச்சி: திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா, நேற்று துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு பால்காவடி எடுத்து வந்து, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்ததால், கோவில் வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நடைபாதையாக வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் வழங்க, பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு 10 மணிக்கு சிங்கார வேலர் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். நாளை 5ம் தேதி இரவு 8 மணிக்கு வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி இரவு 8 மணிக்கு, முருகன் வேடன் விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, 7ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள், வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கதிரேசன், மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி ஜங்சன் வழிவிடுவேல்முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar