Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திரவுபதி அம்மன் கோவில் மகா ... திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வளனார் ஆலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
03:04

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. மறைமாவட்ட நிர்வாகி ஆரோக்கியசாமி, பாதிரியார் ஸ்டேன்லிராபின்சன் தலைமையில் உலக நன்மை வேண்டி திருப்பலி நடந்தது. புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பாதிரியார்கள் செல்வராஜ், ஆனந்த் தலைமையில் திருப்பலி நடந்தது. திருச்சிலுவை ஆராதணை, திருவிருந்து, சிலுவை முட்டி செய்தல் ஆகியவை நடந்தன. திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். புனித சனிக்கிழமையான இன்றிரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடக்கிறது.செந்துறை: நத்தம் செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. நல்லதிக்கன்பட்டி பிரிவில் துவங்கிய ஊர்வலம் குரும்பபட்டி வழியாக ஆலயம் சென்றடைந்தது. பாதிரியார்கள் லாரன்ஸ், மரியசெல்வன், வின்சென்ட் பெர்னாண்டோ, தாஸ் ஆகியோர் தலைமையில் மழை மற்றும் உலக நன்மை வேண்டி கூட்டுத்திருப்பலி நடந்தது. புனித வெள்ளி சடங்கு, இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதணை, திருவிருந்து, சிலுவை முட்டி செய்தல் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று புனித சனிக்கிழமை முன்னிட்டு இரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடைக்கானல் : அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட்டில் அருகில் உள்ள சி.எல்.எஸ். புக் ஷாப்பிலிருந்து புறப்பட்டு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக திரு இருதய ஆலயத்திற்கு சென்றனர். மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சலேத் அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ ஆலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதணை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar