திருப்பதி: கடந்த 85ம் ஆண்டு ஆந்திரா முதல்வராக இருந்த என்.டி.ராமராவ் ஏப்ரல் மாதம் 6ந்தேதி 1985ம் ஆண்டு திருமலையில் பக்தர்களுக்கான ஒரு திட்டத்தை துவக்கிவைத்தார். திருமலைவரும் ஏழை எளிய பக்தர்களின் தேவைக்காக இலவச தங்குமிடம், இலவச சுவாமி தரிசனம் மற்றும் அன்னதானம் ஆகிய மூன்றினையும் ஒருங்கிணைத்து துவக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு இன்றோடு முப்பது ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அன்னதானம் இன்று ஒரு லட்சம் பக்தர்களை தாண்டி செல்கிறது, அன்னதான பணிக்காகவே 1700 பேர் இங்கு வேலை செய்கின்றனர். அன்னதான கூடத்தில் மட்டுமின்றி படியேறிவரும் பக்தர்களுக்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்ய ப்படுகிறது இதற்கென வருடத்திற்கு 70 கோடி ரூபாய் செலவாகிறது.இந்த 70 கோடி ரூபாய் திருமலை கோவில் சார்பில் டிப்பாசிட் செய்யப்பட்ட பணத்திலிருந்து வட்டியாக பெறப்பட்டு செலவிடப்படுகிறது. இந்த திட்டங்கள் இன்னமும் சிறப்பாக செயல்பட்டு ஏழை எளிய மக்களுக்கு இன்னும் நிறைய பயன்படட்டும்.