Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி மாரியம்மன் கோயிலில் ... பழநி உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி! பழநி உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் பூ மிதி திருவிழா!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2015
11:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில், பக்தி பரவசத்துடன் நேற்று பக்தர்கள் பூ க்குண்டம் இறங்கினர்.  பங்குனி மாதம் வழக்கமாக நடைபெறும் போடிபாளையம் பத்ரகாளியம்மன் பூ மிதி திருவிழா நேற்று நடந்தது.  இதையெ õட்டி,  கடந்த மாதம் 23ம் தேதி இரவு நோன்பு சாட்டப்பட்டது. 24ம் தேதி இரவு திரவுபதியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து  அம்மனுக்கு கொலு வைக்கப்பட்டது.  தொடர்ந்து 25ம் தேதி அதிகாலை சக்தி கும்பம் முத்தரிக்கப்பட்டது. அடுத்து 27ம் தேதி இரவு பக்தர்களால் பூ÷ வாடு எடுக்கப்பட்டது. 30ம் தேதி ஐவர் மலை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தமும், 3ம் தேதி  வெள்ளியங்கிரி, தெய்வகுளம் காளியம்மன், கோவில், நல்லூத்து, பழநி, திருமூர்த்திமலை, நல்லிகவுண்டன்பாளையம், அவல்புகந்துறை ஆகிய  இடங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அடுத்தும் 5ம் தேதி புலிவேடம் அணிந்து ஆட்டு கிடா எடுத்தல், 6ம் தேதி மீன்குளத்தி பகவதிய ம்மன் கோவில், கோவிந்தமலை, கோடந்தூர் மாரியம்மன் கோவில், அவினாசி, கொடுமுடி, குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில், கன்னிய õகுமரி, தஞ்சாவூர், பெரியாறு, மலைக்கோட்டை, நன்னனூர் கோமதீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.  தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு அம்மன் சப்பர ஊர்வலமும், மாலை, 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில் பச்சை போடும்  வைபவமும், 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பு, இரவு 9:00 மணிக்கு பூ குண்டம் வளர்த்தல், வாணவேடிக்கை 11:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும்  நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை அக்னி கும்பம் முத்தரித்து, காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் ஆரம்பமானது. இதில் அம்மனுக்கு  விரதமிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பூ குண்டத்தில் இறங்கி, பூ மிதித்தனர். பூ மிதி திருவிழாவை காண, நூற்றுக்கணக்கான பக்தர்கள்,  குண்டத்தை சுற்றிலும் கூடியிருந்தனர்.  குண்டம் இறங்கும் வைபவம் முடிந்ததும், காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணியளவில்  மாவிளக்கு எடுக்கப்பட்டது. திருவிழாவையொட்டி, பத்ரகாளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சக்தி கும்பம் க ங்கையில் விடுதல், நாளை மகா அபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னதியில் ஐப்பசி பவுர்ணமியை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar