பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. நேற்று காலை, ஸ்வாமிக்கு கணபதி ஹோமம், அஷ்டபயரவயாகம், லஷ்மி பூஜை, கோ பூஜை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 10.30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு, சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. இதில், தர்மபுரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா,, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.