காரைக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கொப்புடை நாயகி திருக்கோயில். இக்கோயில் சித்திரை திருவிழா, சித்திரை மாதக்கடைசி செவ்வாய்கிழமை தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் முடிய பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். எட்டாம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவின்போது பனைமர சட்டங்களைக் கொண்டு அமைக்கப்படும் தேரில் அம்மன் புறப்பட்டு கண்மாய் வழி உலா சென்று கோயில் திரும்புவாள்.