ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள கீழசெய்தலை கிராமத்தில் காளியம்மன் மற்றும் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. வருடம் தோறும் வைகாசி மாதத்தில் மூன்றாவது செவ்வாய் அன்று அம்மனுக்கு கொடை விழா நடத்தப்படுகிறது. அப்போது அனைத்து மக்களும் பொங்கல் வைத்து அன்னையை வணங்குகின்றனர். ஒரு ஆண்டு காளி அம்மனுக்கும், அடுத்த ஆண்டு வடக்குவாசல் செல்வி அம்மனுக்கும் என இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.