நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள். இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். உயிர்கள் அனைத்தும் பஞ்ச பூதத்தின் உருவாக்கமே. இந்த இயற்கை சக்திகளின் வடிவாக இருந்து நம்மைக் காப்பவர் இறைவன். இதை உணர்த்தும் விதத்தில் பஞ்சபூத தலங்களில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். திருவாரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மண் லிங்கமாகவும், திருவானைக்காவலில் நீர் வடிவாகவும், திருவண்ணாமலையில் நெருப்பாகவும், காளஹஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில்ஆகாயமாகவும்உள்ளார்.