Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை சமணர் படுகை: ... விஜயமாநகரம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கிரிவீதியில் மூலிகை காற்று தரும் கடம்பமரத்திற்கு ஆபத்து!
எழுத்தின் அளவு:
பழநி கிரிவீதியில் மூலிகை காற்று தரும் கடம்பமரத்திற்கு ஆபத்து!

பதிவு செய்த நாள்

15 மே
2015
12:05

பழநி: பழநி மலைக்கோயில் கிரிவிதியிலுள்ள கடம்பமரத்து கிளைகளை சிலர் வெட்டுவதால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் எழு, வைகாசி முன் எழு நாட்களில் அக்கினி நட்சத்திரம் விழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் மே 8ல் துவங்கியுள்ளது. இந்த நாட்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களிலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும், அந்த வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ணநோய் உட்பட வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்கள் கடம்ப மரப்பூக்களை தலையில் சூடி அதிகாலை நேரம், மாலை நேரங்களில் சஞ்சீவி மூலிகை காற்றை அனுபவிக்க மலைக் கோயிலை கிரிவலம் வருவர். விழா நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. மரங்களுக்கு ஆபத்து: பழநி மலைக்கோயில் தெற்குகிரிவீதியில் உள்ள கடம்ப மரங்களில் பூக்கள் பூத்துகுலுங்குகிறது. அதை பறித்து விற்பனை செய்வதற்காக சிலர் அத்துமீறி மரத்தின்மீது ஏறி பூக்களை பறிக்காமல் ஒரேஅடியாக கிளைகளை வெட்டுகின்றனர். இதனால் வரும்காலங்களில் மரத்தின் வளர்ச்சி பாதிக்கும். பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அழியவாய்ப்பு உள்ளதால் அத்துமீறி மரக்கிளை வெட்டுபவர் மீது பழநிகோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar