கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி எல்லைக் கட்டு உற்சவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. கட லூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தேரடியில் வண்ணார மாரிய ம்மனுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, பிடாரி அம்மனுக்கு பூஜை செய்து, கிடா வெட்டப்பட்டது. இளைஞர்கள் தீப்பந்தங்கள் ஏந்தி நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். நேற்றிரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 28ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 9:30 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை நடக்கிறது. 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல், 2ம் தேதி காலை நடராஜர் தரிசனம் தீர்த்தவாரி நடக்கிறது. 4ம் தேதி காலை திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி, இரவு திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. விழா காலங்களில் வேதபாராயணம், தேவாரம், நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.