மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை கோவிலில் விநாயகர், முருகன், பரிவாரமூர்திகள் மற்றும் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு, அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது. இரவு 11:00 மணியளவில் தீச்சட்டி ஊர்வலம், 12:00 மணியளவில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் மற்றும் உபயதாரர்கள் கலந்துக் கொண்டனர்.