Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா அனுமந்தை அங்காளம்மன் கோவில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் நகைளை மீட்க அறநிலைய துறை நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2015
11:05

சின்னாளபட்டி: அம்பாத்துரை பத்ரகாளியம்மன் கோயில் நகைகளை மீட்பதற்கு அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாத்துரையில், பாண்டிய மன்னர்கள் கட்டிய பத்ரகாளியம்மன், மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்துள்ளது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாமல் ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகளும் ஏராளமாக இருந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அறங்காவலராக இருந்தவர் கந்தசாமி. இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு, பொறுப்பேற்ற அறநிலைய துறையின் தக்காரிடம் நகைகள் பட்டியலிட்டு ஒப்படைக்கப்படவில்லை. அறநிலைய துறையினரும் நகைகளை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நெக்லஸ் காணாமல் போனதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அம்பாத்துரை ஜமீன்தார் மற்றும் பொதுமக்கள் அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர். பூசாரியாக பணியாற்றிய முத்துச்சாமி பணிநீக்கம் செய்யப்பட்டார். அறநிலைய துறை ஆவணங்களின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நகைகளையும், முன்னாள் அறங்காவலரிடம் இருந்து திரும்ப பெறவும், காணாமல் போன நகை குறித்து விசாரணையை விரைவாக முடித்து, நகையை மீட்கவும் அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar