மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது துளசி. வாடிய நிலையிலும் இதைக் கொண்டு பூஜை செய்யலாம் என சாஸ்திரம் சொல்கிறது. இதற்கு யாதயாம(பழையது) என்ற தோஷம் கிடையாது. சுவாமிக்கு பிரசாதம் படைக்கும்போதும், அத்துடன் ஒரு துளசி இலையைச் சேர்த்தே வைக்க வேண்டும். இதனால், அந்த உணவு துõய்மையாகும். அதே போல, எந்த பொருளைத் தானம் செய்தாலும், ஒரு துளசி வைத்து தானம் அளிப்பது இரட்டிப்பு புண்ணியத்தை தரும்.