சிவன் கோயில்களில் பொதுவாக வில்வம், வன்னி, கொன்றை போன்ற மரங்கள் தலவிருட்சமாக இருக்கும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் (கேது தலம்) ஆகிய கோயில்களில் மூங்கில்களே தலவிருட்சமாக இருக்கிறது. வேதங்களே, சுவாமியை வழிபடுவதற்காக மூங்கில் வடிவில் இருப்பதாநக சொல்வதுண்டு. அம்பிகை தலங்களில் தேனி மாவட்டம் மூங்கில்கணை காமாட்சியம்மன் கோயிலிலும் மூங்கிலே தல விருட்சமாகும்.