பழநி:பழநி மலைக்கோயில் பிரசாத ஸ்டால் விற்பனை உரிமம் ரூ. 3 கோடியே 96 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம்போனது.பழநி மலைக்கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, புட்டமுது, தேன் குழல், சித்ரான்னங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான விற்பனை உரிமம், கடந்த ஆண்டு ரூ.3.60 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஆண்டு ஜூலை முதல் 2016 ஜூன் வரை விற்பனை உரிமைக்கான பொது ஏலம் நடந்தது.
பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.தற்போதைய குத்தகைதாரர் திருச்சி சீனிவாசன், திருச்செந்துாரை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் ஏலத்தொகை ரூ.4.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் துவங்கியது. அத்தொகைக்கு யாரும் ஏலம் கேட்க முன்வராததால், ரூ.3.88 கோடியில் இருந்து ஏலம் கேட்க துவங்கினர்.இறுதியாக சீனிவாசன் ரூ.3 கோடியே 96லட்சத்து 10
ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். மூடியிடப்பட்ட டெண்டரில் ரூ.3.60 கோடியாக கேட்டிருந்ததால் அதிகபட்ச தொகைக்கு கேட்ட சீனிவாசனுக்கு பிரசாத ஸ்டால் உரிமம் வழங்கப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.