பதிவு செய்த நாள்
29
மே
2015
11:05
திருவள்ளூர்: திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவா - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவிலில் உள்ள தண்டியடிகள் நாயனாருக்கு குரு பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.