குமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2015 10:06
நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையிலும், மாலையிலும் தேவி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாள் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. உள்ளூர் பக்தர்களுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதியிலும் தேர் வந்த போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் நடத்தினர். தேரோட்டத்தையொட்டி விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று தெப்பத்திருவிழாவும், ஆராட்டும் நடைபெறுகிறது.