Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை முருகன் கோவிலில் வைகாசி ... தஞ்சாவூர் பன்னிரு கருட சேவை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பக்தர்களுக்கு 3 நாள் அனுமதி: மீட்புப் படையினர் உஷார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
12:06

வத்திராயிருப்பு:சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று நடக்கும் பவுர்ணமி பூஜைக்காக மூன்று நாட்களுக்கு மட்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் மே 17 அன்று பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்தனர். தீயணைப்பு, வனத்துறை, காவல்துறையினர் பக்தர்களை கயிறுகட்டி மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் இறந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல போலீசார் வனத்துறையினர் தடைவிதித்தனர். இதனால் கடந்த 15 நாட்களாக பக்தர்கள் செல்லவில்லை. வெளி மாநிலம் மற்றும் நீண்ட துாரத்தில் இருந்து விபரம் தெரியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மலையில் பிரசித்தி பெற்ற பவுர்ணமி பூஜை இன்று நடக்கிறது; இதற்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இதை தொடர்ந்து தடை 3 நாட்களுக்கு விலக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 3 வரை காலை 6 மணி முதல் மாலை 4 வரை மலையேற அனுமதி உண்டு. மாலை 4 மணிக்கு மேல் வந்த பக்தர்களை மலையேற போலீசார் அனுமதிக்காததால் அடிவாரத்தில் உள்ள தோப்பு மடங்கள் ஷெட்களில் தங்கினர். மலையேறிச் சென்ற பக்தர்களும் மாலை 4 மணிக்கு பின் கீழே இறங்க அனுமதிக்கவில்லை. பக்தர்கள் மலையில் உள்ள அன்னதான மடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாங்கேணி ஓடை வழுக்குப்பாறை சங்கிலிப்பாறை போன்ற இடங்களில் தீயணைப்பு படையினர் வனத்துறையினர் மீட்புக் கருவிகளுடன் முகாமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar