திருப்பதி: திருமலையில், தினமும், 2.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. கடந்த, நான்கு நாட்களாக, திருமலையில் லட்டு பிரசாத்திற்கு தட்டுப்பாடு நிலவியது.
அதனால், லட்டு பிரசாதம் கிடைக்காமல், பக்தர்கள் மனமுடைந்து வீடு திரும்பினர். இதை கவனித்த தேவஸ்தான அதிகாரி கள், தினசரி லட்டு தயாரிப்பை, 2.5 லட்சத்தில் இருந்து, 3.10 லட்சமாக உயர்த்திஉள்ளனர்.