Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதிய பள்ளிவாசல் திறப்பு! திருப்பதி திருமலையில் லட்டு தயாரிப்பு அதிகரிப்பு! திருப்பதி திருமலையில் லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலைக்கு செல்ல சிறப்பு அனுமதி: ஜூன் 17 வரை பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
11:06

வத்திராயிருப்பு: நேற்று ஒரே நாளில் பிரதோஷம் ,சிவராத்திரி தினம் வந்ததால் சதுரகிரி

Default Image
Next News

மலைக்கு செல்ல அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கு பக்தர்கள் செல்ல தடை உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. நுழைவாயிலில் பக்தர்கள் போராட்டம் செய்ய முயன்றதை தொடர்ந்து போலீசார் சிறப்பு அனுமதி பெற்று அவர்களை மலைக்கு அனுப்பினர்.

சதுரகிரி மலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை கடக்க முயன்ற 9 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தனர். இதனால் மலைக்கு பக்தர்கள் செல்ல 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டும் தலா 3 நாட்கள் பக்தர்கள் சென்றுவர அனுமதி
வழங்கப்பட்டது. ஜூன் 2 பவுர்ணமியைத் தொடர்ந்து 3 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மலையில் இருந்த அனைத்து பக்தர்களும் போலீசாரால்
இறக்கிவிடப்பட்டனர்நாளை (ஜூன் 16 ) அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இதற்கு இன்று
முதல் ஜூன் 17 வரை மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று (ஜூன் 14 )
பிரதோஷம், சிவராத்திரி என ஒரேநாளில் வந்ததாலும், ஞாயிறு விடுமுறை என்பதாலும்
ஏராளமான பக்தர்கள் தடை உத்தரவு தெரியாமல் மலை அடிவாரத்தில் குவிந்தனர்.அவர்கள்
மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம்,
புதுச்சேரி உட்பட வடமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் 2 மணி நேரமாக அடிவாரத்திலே காத்திருந்தனர். நீண்ட தொலைவிலிருந்து வந்திருப்பதால் தாங்களை மலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.

வனத்துறையினர், போலீசார் மறுத்தனர்.பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் மலைக்கு அனுமதிக்க கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் மதுரை,விருதுநகர் கலெக்டர்கள், எஸ்.பி. ஆகியோரிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். இதன்பின் காலை 9 மணிமுதல் பக்தர்கள் மலையேறினர். அடிவாரத்தில் பக்தர்கள் பெயர், முகவரியை பதிந்து கையொப்பமிட்ட பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar