Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகஸ்தீஸ்வரர் கோவிலில் குரு ... அபிநவ மந்த்ராலயா ராகவேந்திரர் கோவிலில் பழக்காப்பு அலங்காரம்! அபிநவ மந்த்ராலயா ராகவேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் ஓடி வந்த தேர்!
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் ஓடி வந்த தேர்!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
10:07

அழகர்கோவில்: அழகர்கோவிலில் ரூ.90 லட்சம் மதிப்பில் தயாரான புதிய தேர் வெள்ளோட்டத்தில் வடம் பிடிக்க பக்தர்கள் இல்லாததால், மண்  அள்ளும் இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டது. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியன்று தேரோட்டம்  நடக்கும். இங்குள்ள தேர் 300 ஆண்டுகள் பழமையானது. மலைப்பாதையில் ஆடி, அசைந்து ஓடியதில் வலுவிழந்து தேரில் இருந்த பல சிற்பங்கள்  சிதைந்து விட்டன. தேரும் ஆட்டம் கண்டது. இதனால் பக்தர்கள் அளித்த ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, நேற்று காலை 9.20 மணிக்கு  வெள்ளோட்டம் துவங்கியது. தேரை இழுக்க பக்தர்களை அழைக்கும் வகையில் முன்கூட்டியே பத்திரிக்கை அச்சிட்டோ, செய்தி வெளியிடவோ ÷ காயில் நிர்வாகம் முன்னேற்பாடு செய்யவில்லை. இதனால் தேரை இழுக்க போதுமான பக்தர்கள் வரவில்லை. பள்ளி மாணவர்களை வைத்து இழுக்க  வேண்டியிருந்தது. அனுபவமில்லாதவர்கள் தேர் இழுத்ததால், ரோட்டோரம் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களில் சக்கரம் சிக்கியது.  இதைதொடர்ந்து தேரை இழுக்க மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு மணி நேரம்  தேர் அங்கேயே நின்றது. பலமுறை இழுத்தும் தேர் நகரவில்லை. வேறு வழியின்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டு, ரோட்டிற்கு  கொண்டு வரப்பட்டது. பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பகல் 2 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அமைச்சர் செல்லுார் ராஜூ மற்றும்  எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar