Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை காந்திமதியம்மனுக்கு ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
75 அடி தூரத்தில் இருந்து ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
75 அடி தூரத்தில் இருந்து ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
10:07

திருப்பதி: திருப்பதியில் 75 அடி துாரத்தில் இருந்து ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதியில் 2004க்கு முன் பக்தர்கள் குலசேகர படியில் (கருவறையில் இருந்து 10 அடி துாரம்); ராமுலவாரி மெட (35 அடி துாரம்) அருகில் இருந்து ஏழுமலையானை தரிசித்தனர். குலசேகரபடி அருகில் ஒரு மணி நேரத்திற்கு 1,500 பேர் என ஒரு நாளைக்கு 27 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
ராமுலவாரி மெட அருகில் ஒரு மணி நேரத்திற்கு 2,500 பேர் என ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது.ஆனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்ந்தது. எனவே அப்போதைய செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியம் துவாரக பாலகர்களான ஜெய விஜயர் உள்ள தங்க வாசலில் (கருவறையில் இருந்து 70 அடி துாரம்) இருந்து மட்டுமே தரிசனம் செய்ய அனுமதித்தார். இதனால் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

வாரத்தில் இரண்டு நாள் அதாவது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் லகு தரிசனம் (35 அடி துாரம்) அளித்து வந்தனர். பின் வந்த செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் கடந்த ஆண்டு தங்கவாசல் அருகில் மூன்று அடுக்கு உயர்மேடை அமைத்து சில வினாடிகள் ஆனாலும் கண்குளிர பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வழி செய்தார்.இதன் பிறகு லகு தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டு மகா லகு தரிசனம் மட்டுமே அமல்படுத்தபட்டு வருகிறது. தற்போது பக்தர் வருகை குறைவாக உள்ள சமயத்திலும் இதே தரிசன முறையை தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. ஆனால் 500 ரூபாய் கட்டணம் கொண்ட வி.ஐ.பி., பிரேக் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் தேவஸ்தானம் 10 அடி துார தரிசனம் கருவறைக்குள் தீர்த்தம் சடாரி அளித்து வருகிறது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேவஸ்தானம் வி.ஐ.பி. பக்தர்களுக்கு அளித்து வரும் தரிசன வசதியை குறைத்து பக்தர் வருகை குறைவாக உள்ள நாட்களில் லகு தரிசனத்தை பின்பற்ற வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar