பதிவு செய்த நாள்
15
ஜூலை
2015
12:07
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ÷பான்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்ணாடம்: அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.