மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2015 10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நேற்று ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆன்றோர் வாக்கின்படி ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அ மோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். அந்த வகையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் நான்கு விழாக்கள் உண்டு அவை ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா என்பனவாகும். ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 18 முதல் 28 வரை பத்து நாட்கள் நடக்கிறது. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு ருது சாந்தி விழா அம்மன் சன்னதியில் நடக்கும்.