கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெருவடைச்சான் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2015 11:07
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. ஆடி பிரமோற்சவத்தையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை வழிபாடு நடக்கிறது. மாலை வீதிவுலாவும், காத்தவராயன் கதை சொல்லும் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. 5ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் கடந்த 21ம் ÷ ததி இரவு நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்று இரவு 9:00 மணிக்கு அம்மன் தெருவடைச்சான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.