பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
11:07
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, சூளைமேனி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில், தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த, 17ம் தேதி, வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், அம்மன் வீதியுலா, கூழ் ஊற்றுதல், வேப்பலை கரகம், தாய் வீட்டு சீர், பால்குடம் எடுத்தல், சறுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு, சூளைமேனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 240 பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர். பின், உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.