Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடிப்பெருவிழா: களை கட்டுகிறது ... முத்து மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள்: தங்குவதற்கு இடவசதியின்றி தவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
12:08

திருவாடானை:திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தங்குவதற்கு வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் விசேஷ பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். அதிகாலையில் சுவாமியை வணங்குவது சிறப்பு என்பதால், ஏராளமான பக்தர்கள் முதல் நாள் இரவே சென்று கோயிலில் தங்கி விடுவார்கள். அவர்கள் தங்குவதற்கு மண்டபம் இருந்த போதும், இடநெருக்கடியால் திறந்த வெளியிலும் ரோடு ஓரங்களிலும் பக்தர்கள் படுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு திருடர்கள் தொல்லை உண்டு. கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. தற்காலிக கடைகள் அதிகரித்து வருவதால் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதியில்லை. பஸ்ஸ்டாண்டு இல்லாததால், பஸ்களை தெருவில் நிறுத்தி திருப்ப செல்ல வேண்டியுள்ளது. பஸ்களை திருப்பும் போது விபத்து ஏற்படுகிறது. டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னைகள் உருவாகிறது. மேலும், கழிப்பறைகள் இல்லாததால் பக்தர்கள் அருகிலிலுள்ள கண்மாயை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆடி கடைசி வெள்ளியன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். திருவாடானையிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கூடுதலாக மண்டபம் கட்டவும் தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar