பதிவு செய்த நாள்
05
ஆக
2015
11:08
திருப்பதி: பக்தர்களிடமிருந்து நிறுவனப் பங்குகளை காணிக்கையாக பெறும் வகையில், நாட்டின் பணக்கார கடவுளர்களில் ஒருவரான, திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பெயரில், டிமேட் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பெயரில், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தில், டிமேட் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கின் எண், 1601010000384828 . இந்த கணக்கின் கீழ், பக்தர்கள், நிறுவனங்களின் பங்குகளை காணிக்கையாக செலுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பங்கு பத்திரங்களை, காகித ஆவணங்களாக வைத்திருப்பதற்கு பதில், மின்னணுவியல் முறையில் கணக்கில் வைத்துக் கொள்ள, டிமேட் பயன்படுகிறது. பெருமாள் பெயரில், டிமேட் கணக்கு துவக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள், காணிக்கையாக செலுத்த நினைக்கும் பங்குகளை, மின்னணுவியல் முறையில், பெருமாள் பெயருக்கு எளிதில் மாற்றி விடலாம்.