Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரக்காணம் அழகுமுத்துமாரியம்மன் ... சபரிமலை நடை திறப்பு: ஐந்து நாட்கள் திறந்திருக்கும்! சபரிமலை நடை திறப்பு: ஐந்து நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய்பாபா மகா சமாதி திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
10:07

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா மகா சமாதி, பக்தர்களின் தரிசனத்திற்காக, நேற்று திறக்கப்பட்டது. பிரசாந்தி நிலையத்திலுள்ள சாய்பாபாவின் சமாதி, நேற்று குரு பூர்ணிமாவையொட்டி, மலர்களை கொண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சத்ய சாய்பாபா, ஏப்ரல் 24ம் தேதி ஸித்தியடைந்தார். இதைத்தொடர்ந்து, சமாதி கட்டும் பணி நடந்து வந்தது. இந்த சமாதி மிகப்பிரமாண்டமாக கட்டப்படும் என, சத்ய சாய்பாபா மத்தியஅறக்கட்டளை அறிவித்து இருந்தது. இந்நிலையில், குரு பூர்ணிமாவை யொட்டி, நேற்று மகாசமாதி திறக்கப்படும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். சத்யசாய்பாபா ஒவ்வொரு ஆண்டும், குரு பூர்ணிமா அன்று பிரசாந்தி நிலையத்தில் உள்ள, சாய் குல்வந்த் ஹாலில், பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் கூடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு அவர் ஸித்தியடைந்த பிறகு, அவரது சமாதியில் வந்து தரிசனம் செய்வதற்காக, ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வந்தனர். இதையடுத்து, சத்ய சாய்பாபாவின் மகா சமாதி , பக்தர்களின் தரிசனத்திற்காக, குரு பூர்ணிமா அன்று திறக்கப்படும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி, நேற்று மகா சமாதி நேற்று திறக்கப்பட்டது. வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாய் குல்வந்த் ஹாலில் திரண்டு இருந்தனர். இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநில அமைச்சர்கள் ரகுவீராரெட்டி, கீதா ரெட்டி, ஆகியோர் பங்கேற்றனர். புட்டபர்த்தி நகரமே, விழாக் கோலம் பூண்டு இருந்தது. புட்டபர்த்தி முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar