Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உச்சி மாகாளியம்மன் கோயிலில் 1008 ... பாதுகாப்பு வளையத்தில் பழநி மலைக்கோயில்! பாதுகாப்பு வளையத்தில் பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க ரோப் கார் திட்டத்திற்கு பதில் மலைத்தோட்டம்!
எழுத்தின் அளவு:
குன்றத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க ரோப் கார் திட்டத்திற்கு பதில் மலைத்தோட்டம்!

பதிவு செய்த நாள்

14 ஆக
2015
11:08

மதுரை: மதுரை வரும் சுற்றுலா பயணிகளை திருப்பரங்குன்றத்திற்கும் வரவழைக்க அங்குள்ள மலைப்பகுதியில் தோட்டம் அமைக்க பரிசீலிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ரோப் கார் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சைட் சீன்ஸ் இங்கு இல்லாததால் இத்திட்டம் கைவிடப்பட்டது.தற்போது உள்ள மலைப்பாதையை ஒட்டிய பகுதி வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் இயக்கம் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. இதற்கு மாற்றாக, இங்குள்ள மலையில் மலைத்தோட்டம் அமைத்து அழகுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து அப்போது ஆராயப்பட்டது. ஆனால் மலையடிவாரத்தில் எக்கோ பார்க் அமைக்கப்பட்டு நீரூற்று நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மலை அருகில் விமான நிலையம் உள்ளதால், இந்த மலையில் தோட்டங்கள் அமைத்து இரவிலும் மின்ஒளியில் ஜொலிக்க கூடிய வசதிகளை ஏற்படுத்தினால், விமானத்தில் இருந்தும் இந்த மலைக்காட்சிகளை வியந்து ரசிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இது போல் இருப்பதாகவும் சுற்றுலா ஆர்வலர்கள் அரசுக்கு தெரிவித்தனர்.தொல்லியல் துறையின் பராமரிப்பில் சில பகுதிகள் இம்மலையில் இருந்தாலும், அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டில் மலை உள்ளது. தொல்லியல் துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.அதிகாரிகள் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் இயற்கையை மேம்படுத்தும் வகையில் நந்தவனம், பூங்கா, சரவணப்பொய்கை என பல பகுதிகள் உள்ளன. மலை மீது தோட்டம் அமைப்பது சவாலானதாகவும், புதுமையாகவும் இருக்கும். தமிழகத்தில் இது ஒரு புது முயற்சியாகவும் இருக்கும். இத்திட்டம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar