Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சேலம் சிவ சக்தி விநாயகர் கோவிலில் ... ஆறுபடை வீடு நுழைவு வாயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிழா, கும்பாபிஷேக விழா எதிரொலி: பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு!
எழுத்தின் அளவு:
திருவிழா, கும்பாபிஷேக விழா எதிரொலி: பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு!

பதிவு செய்த நாள்

22 ஆக
2015
12:08

ப.வேலூர்: திருவிழா, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பரமத்தி, ப.வேலூர், பாண்டமங்கலம், கபிலர்மலை, பொத்தனூர், ஜேடர்பாளையம் மற்றும் கரூர் மாவட்டம் சேமங்கி ஆகிய பகுதிகளில், மல்லிகை, சம்பங்கி, அரளி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள், ப.வேலூரில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பூக்களை சுற்று வட்டாரத்தை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் எடுத்துச் செல்வது வழக்கம். விசேஷ நாட்களில் பூக்கள் விலை உச்சத்தை அடைவதும், மற்ற காலங்களில் விலை சரிவு ஏற்படுவதும் இயல்பு. கடந்த மாதம் ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் செய்ததால், பூக்களில் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை பூக்கள் விலை உச்சத்தை தொட்டது. தற்போது, திருவிழா, கும்பாபிஷேக விழா என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து, பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 180க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லிகை, நேற்று, மூன்று மடங்கு உயர்ந்து, கிலோ, 500 ரூபாய்க்கு ஏலம்போனது. அதேபோல், கிலோ, 180க்கு ஏலம் போன, முல்லைப்பூ, நேற்று கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், கிலோ, 200க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்களி, 400 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு ஏலம் போன, செண்டுமல்லி, 300 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, அரளி பூ, ஒரு கட்டு, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை உயர்வு பயிரிட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar