பதிவு செய்த நாள்
28
ஆக
2015
12:08
செஞ்சி: செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்ப÷ ரஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பெண்கள் அகல் விளக்÷ கற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபி தகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம், செய்தனர். மாலை 6:00 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது. திருப்பணிக்குழு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில், முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. உபயதாரர் சண்முகம், ஜெயலட்சுமி, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் செல்வம் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை ÷ காவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். ÷ தவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.