மதுரை : மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி அன்னை சர்ச் திருப்பலி திருவிழா, நாளை (ஆக.,29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ பங்கேற்கிறார். செப்.,8 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் திருப்பலி நடக்கிறது. நிறைவு நாளன்று மாலை தேர் பவனி நடக்கிறது. பிஷப் அந்தோணி பாப்புசாமி பங்கேற்கிறார். ஏற்பாடுகளை பாதிரியார் அப்போலின் கிளாரட்ராஜ், உதவி பங்குதந்தை ஜான் ரிச்சர்டு, செயலாளர் தாஸ் செய்தனர்.