பதிவு செய்த நாள்
28
ஆக
2015
12:08
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, பூண்டி மாதா பேராலயம் உள்ளது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக, தரிசிக்க விரும்பும் ஆலயமாகும். இங்கு, ஆண்டுதோறும கன்னி மாரியின் பிறப்பு பெருவிழா, வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதன்படி, வரும், 30ம் தேதி மாலை, 5 மணிக்கு குடந்தை ஆயர் அந்தோனிசாமி, விழாவை கொடியேற்றி துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், சிறப்பு திருப்பலியும், சிறு சப்பர தேர்பவனியும் நடக்கிறது. விழாவில், முக்கிய தினமான செப்., 8ம் தேதி மாலை "மாணீயாள் குடும்பங்களின் காவலி என்ற தலைப்பில், தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது. இரவு, 10.00 மணிக்கு மின் விளக்குகளாலும், மல்லிகை மலர்களால் அலங்காரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனியை, குடந்தை ஆயர் அந்தோனிசாமி, புனிதம் செய்து துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, 9ம் தேதி காலை, 6.00 மணிக்கு, கூட்டுத் திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பேராலய அதிபர் அமிர்தசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், உதவி பங்குத்தந்தைகள் செய்து வருகின்றனர்.