பதிவு செய்த நாள்
29
ஆக
2015
12:08
கடலூர்: கடலூர் வட்டம், தியாகவல்லி கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், மாரியம்மன், கன்னிகா பரமேஸ்வரி, சப்த கன்னி, அக்னிவீரன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ÷ ஹாமம், ரக்ஷாபந்தனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்த்ர ஹோமம், கடம் புறப்பாடு, மூலவர் விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான மூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.