Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் வரலட்சுமி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தப் பூ கோலமிட்டு, ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
அத்தப் பூ கோலமிட்டு, ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
12:08

மூணாறு: கேரளாவில் மலையாள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையிலும், அறுவடை திருநாளாகவும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நேற்று ஓணம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வீடுகள் தோறும் வாசலில் "அத்தப் பூ கோலமிட்டு, பாரம்பரிய புத்தாடை அணிந்து, கலை நிகழ்ச்சிகளை நடத்தி, ஊஞ்சலில் அமர்ந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமான "ஓண சத்யா எனும் விருந்து, அறு சுவைகளில், கசப்பு தவிர ஐந்து சுவைகளில் வித, விதமாக சமைப்பது வழக்கம். இந்த விருந்தின்போது, குறைந்த பட்சம் 20 வகைக்கு குறைவில்லாமல் முற்றிலும் சைவத்தில் உணவு தயார் செய்யப்படும். குறிப்பாக அரிசி சாதம்,பருப்பு,நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம்,மோர்,தோரன்,கூட்டு, கிச்சடி,பச்சடி, அவியல்,இஞ்சி கறி, இஞ்சி உள்பட பல்வேறு வகை ஊறுகாய், எரிசேரி என்ப்படும் மோர் குழம்பு, மிளகாய் அவியல், அப்பளம், சீடை, ஏத்த வாழை சிப்ஸ், சக்கரைபுரட்டி, புதிய அரிசி மாவில் தயார் செய்த அடை மற்றும் அடை பிரதமன் உள்பட பல்வேறு வகை பாயசங்கள் போன்றவை கண்டிப்பாக இடம்பெறும். இவை தலை வாழை இலையில் பரிமாறப்படும். இவற்றை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு ஜாதி, மத வேறுபாடு இன்றி மலையாள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையை, கேரளாவில் வசிக்கும் தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். மூணாறில் முதன்முறையாக பிரணவ சுப்பிரமணி சுவாமி ஆன்மிக குழு சார்பில், கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் "அத்தப் பூ கோலப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் வித, விதமான பூக்களில் கோலமிட்டனர். சிறந்த பூக் கோலங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக குழு தலைவர் மாடசாமி,பொது செயலாளர் குமார், ஆலோசகர் சூட்டுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 
temple news
கீழடி; கீழடி அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கி.பி., 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, சிலைகளை ... மேலும்
 
temple news
கீழக்கரை; ஏர்வாடியில் அல் மஸ்ஜிதுல் ஜாமியா குத்பா பள்ளிவாசல் தமிழகத்தில் மிகப் பழமையான ... மேலும்
 
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar