பாலசமுத்திரம் : பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழா ஆக. 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருமாள் தினமும் காலை 7 மணிக்கு மேல் சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 7 மணிக்குமேல் அனுமான், கருடர் போன்ற வாகனங்களில் திருவுலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (செப்.,1ல்) காலை 8 மணிக்கு திருத்தேரோட்ட விழா நடக்கிறது.