விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் குத்து விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2015 11:09
விழுப்புரம்: விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் குத்து விளக்கு மற்றும் லட்சார்ச்சனை பூஜை நடந்தது.விழுப்புரம் அபிநவ மந்த்ராலயத்தில் ராகவேந்திரா சுவாமிகளின் 344ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கிய மத்யம ஆராதனையில், ராகவேந்திர சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக்கவசம் சாற்றுதல் நடந்தது.தொடர்ந்து 8:30 மணிக்கு சென்னை குருஜி ராகவேந்திராச்சார் தலைமையில் மகா கணபதி, சுதர்சன, தன்வந்திரி, லஷ்மி குபேர, ராகவேந்திர அஷ்டாக்ர ஹோமங்கள் நடந்தது. உலக நலன் வேண்டி குத்துவிளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தன.தொடர்ந்து மகாதீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாட்டினை ராகவேந்திரா அறக்கட்டளை மற்றும் பக்த சேவா இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.