ஆறுமுக நாவலர் என்னும் சைவப்பெருந்தகை விபூதி அணியும் முறை பற்றி சொல்லியுள்ளதைக் கேளுங்கள். சிவபெருமானுக்குரிய மங்கலச் சி ன்னங்களில் விபூதி பிரதான இடம் பெற்றுள்ளது. விபூதி இடும்போது, சிவ மந்திரங்களான நமசிவாய, என்றோ, சிவசிவ என்றோ, சரவணபவ என் றோ சொல்லி வலக்கையின் பெருவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் இணைத்து விபூதி எடுத்து (ரிஷப முத்திரை) ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்றிலும் தோய்த்து மூன்று பட்டையாக இட வேண்டும். தீட்சை பெறாதவர்கள், சாதாரண பட்டையாகப் பூச வேண்டும் என்பது மரபு. ஆட்காட்டி விரலால் விபூதி, குங்குமம் இடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். காளையார்கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லும் பக்தர்கள் இதைக் கடைபிடிக்க பழகி விடுங்கள்.