Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேஷ வாகனத்தில் சித்தி விநாயகர் ... திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அதிரடி: வி.ஐ.பி., தரிசன நேரம் குறைப்பு திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பழநி சபா மூலம் 6 டன் பூக்கள்!
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பழநி சபா மூலம் 6 டன் பூக்கள்!

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

பழநி: புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் திருப்பதிக்கு 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிருந்து 700 கிலோ பூக்கள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி, போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் பெறப்பட்டு, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி, பிரம்மோற்சவ விழாவிற்காக டன் கணக்கில் பூக்கள் பழநியிலிருந்து அனுப்பி வைக்கப்படும். தற்போது பழநி- திருப்பதி அரசு பஸ் போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தால், புஷ்ப கைங்கர்யா சபா மூலம் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிப்பட்ட 700 கிலோ பூக்களை திண்டுக்கல்லிருந்து திருப்பதிக்கு அனுப்பிவைத்தனர். ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் ஹரிஹரமுத்து, சின்னச்சாமி, சிற்றம்பலம் நடராஜன் உள்ளிட்டோர் செய்கின்றனர்.

சபா பொருளாளர் மருதசாமி கூறுகையில்,“13 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். இவ்வாண்டு இருமுறை பிரம்மோற்சவ விழா திருப்பதியில் நடக்கிறது. அதற்காக முதற்கட்டமாக துளசி, வடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பிவைக்கிறோம். தொடர்ந்து பூக்களை சேகரித்து பிரம்மோற்சவ செப்., 24 வரை 6 டன் பூக்களை அனுப்புவோம். இதுபோக புரட்டாசிசனிக்கிழமை, பிற விசேஷ நாட்களிலும் திருப்பதி தேவஸ்தானம் ஆர்டரின் பெயரில் பூக்களை சேகரித்து அனுப்புகிறோம். பழநி-திருப்பதி பஸ் சேவை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார். திருப்பதிக்கு பூக்களை அனுப்ப விரும்புவோர் 94434 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar