ஓலைக்காரி அம்மன் என்ற பெயரில், பத்து வயதுச் சிறுமியாக காட்சி தரும் அம்மனை தரிசிக்க வேண்டுமா ? மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள முத்துலிங்காபுரத்தில்தான் இந்த அம்மன் தரிசனம் கிடைக்கிறது. இக்கோயிலில் உள்ள அணையா விளக்கை தரிசிப்போருக்கு அனைத்துப் பேறுகளையும் ஓலைக்காரி அம்மன் அருள்கிறாளாம்.