பதிவு செய்த நாள்
06
அக்
2015
10:10
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இக்கோவிலில் பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், அரிசிமாவு, சந்தனம் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.