Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்ணச்சநல்லூரில் கழுவேற்ற திருவிழா கரூர் வெ.மலையில் ஆடிக்கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2011
12:07

திருச்சி: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. வயலூர் முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருத்திகை எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் முருகப்பெருமான். சூரபத்மனை அழிப்பதுக்காக, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளில் தோன்றிய கார்த்திகேயனை, ஆறு கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். கார்த்திகை பெண்களின் பெருமையை போற்றும் வகையில் கிருத்திகை (கார்த்திகை) விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றது. ஆடிக்கிருத்திகை அன்று, தடைகளை தகர்த்தெறியும் முருகனுக்கு, காவடிகள், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்வது முருகப் பக்தர்களின் வழக்கம். ஆடிக்கிருத்திகையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. குமார வயலூர் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பால் காவடி, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் சிங்கார வடிவேலர் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 10.30 மணிக்கு பிரயாச்சித்த அபிஷேகம், அர்த்த ஜாம பூஜை நடந்தது. அதுவரை நடை திறந்திருந்தது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவானைக்கோவில் பாலதண்டாயுதபாணி, மேலக்கொண்டயம்பேட்டை சுக்ரான் கோவில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.விராலிமலை முருகன் கோவில், புதுக்கோட்டை குமரமலை முருகன் கோவில் உள்ளிட்ட சிறப்புமிக்க மலைக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar