Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்! பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம்: நவ. 18ம் தேதிக்கு மாற்றம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம்: நவ. 18ம் தேதிக்கு மாற்றம்!

பதிவு செய்த நாள்

03 நவ
2015
10:11

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் நவ., 23ம் தேதிக்கு பதில், 18ம் தேதி, நடக்கிறது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல் கட்டமாக, பரமபத வாசல் கோபுரம், வடக்கு வாசல், கிழக்கு வாசல், கட்டை கோபுரம் உள்ளிட்ட, 11 கோபுரங்களுக்கும், சரஸ்வதி, கிருஷ்ணர், வேணுகோபாலன், நம்மாழ்வார், தன்வந்திரி, ஹயக்கிரீவர் உள்ளிட்ட, 43 உப சன்னிதிகளுக்கும், செப்டம்பர், 9ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, மூலஸ்தானம், ராஜகோபுரம், தாயார் சன்னிதி, ரங்கா கோபுரம் உட்பட, 10 கோபுரங்கள்; 15 சன்னிதிகளுக்கு நவ., 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த கும்பாபிஷேகம், நவம்பர், 18ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 22ம் தேதி கைசிக ஏகாதசி நாளாக உள்ளதால், நவ., 18ம் தேதியே கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. நவ., 14ம் தேதி சனிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. 18ம் தேதி காலை, 9:15 மணி முதல், 10:15 மணி வரை கும்பாபிஷேகம் நடக்கிறது என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

வைகுண்ட ஏகாதசி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிச., 10ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, நேற்று காலை முகூர்த்த கால் நடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முகூர்த்தக்கால், ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar