Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம்: நவ. ... திருச்சானூர் பத்மசரோவரம் திருக்குளம் மூடல்! திருச்சானூர் பத்மசரோவரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்!
எழுத்தின் அளவு:
பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்!

பதிவு செய்த நாள்

03 நவ
2015
10:11

கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததாலும், மாநகராட்சி ஒத்துழைக்காததாலும்  திருவேட்டீஸ்வரர் கோவில் பொலிவிழந்து வருகிறது. சென்னை, திருவல்லிக்கேணி சன்னிதி தெருவில் உள்ள, திருவேட்டீஸ்வரர் கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது. ராகு, கேது பரிகார தலமாக உள்ளது.  மேலும், சிவன், அம்பாள், சண்முகர் என, மூன்று  தெய்வங்களுக்கும் தனித்தனியே கொடிமரங்கள் உள்ளன. பெருமாளை மணக்க, மகாலட்சுமி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். தற்போது, கோவிலின் குளம் சிதிலமடைந்து உள்ளது. மழைநீரோடு, கழிவுநீரும் குளத்துக்குள் வருவதால், அதில் உள்ள தண்ணீர் மாசடைந்து உள்ளது. குளத்தின் படிக்கட்டுகள் விரிசல் விட்டுள்ளன. கோவில் சுற்றுச்சுவரை சுற்றி, குப்பை கொட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி முறையாக குப்பையை அகற்றுவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த, 2002ல் கும்பாபிஷேகம் நடந்த கோவிலில், 12 ஆண்டுகள் கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.  கோவில் தேருக்கு என, தேர் நிறுத்தங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால், இரண்டு மரத்தேர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்கின்றன.  தேரின் அடியில் குப்பை தேங்கி கிடக்கிறது. அதில் உள்ள மர சிற்பங்கள் அனைத்தும் சிதில மடைந்து விட்டன.  முறையாக திருப்பணி செய்து, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியதாவது: கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம். அதற்காக, திருப்பணி குறித்த விளம்பர பலகை கோவிலுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.  விரைவில் தேர் நிலையம் கட்டப்படும். வாகனங்களும், தேரும் கும்பாபிஷேக திருப்பணியின் போதே செப்பனிடப்படும். இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar