Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்றிமலை பாச்சலூர் வந்த கதை! ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் இறைவழிபாடுடன் கூடிய சமூகசேவை!
எழுத்தின் அளவு:
வல்லபை ஐயப்பன் கோயிலில் இறைவழிபாடுடன் கூடிய சமூகசேவை!

பதிவு செய்த நாள்

07 நவ
2015
11:11

ரெகுநாதபுரம்: ஆன்மிகம் என்பதில் தனிமனித ஒழுக்கம், பிறருக்கு செய்யும் சேவைகள் இவற்றிற்கான அர்த்தம் பொதிந்துள்ளது. தான் மட்டும் வாழாமல் தம்மை சார்ந்து இருப்பவர்களும் குறைவின்றி நிறைவாக வாழ்வதற்கு துணைபுரியும் செயலை சப்தமில்லாமல் செய்துவருகிறது ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா  சிறப்பாக நடந்து வருகின்றன. கார்த்திகை முதல் மார்கழி வரை மண்டல நாட்களில் அன்னதானம் நடக்கிறது.

கோயிலின் தலைமை குருசாமி வல்லபை மோகன் கூறுகையில்
,“ பக்தியுடன் சேவை, சேவையுடன் பக்தி’ என்ற குறிக்கோளுடன் கடந்த 2005 முதல் ஐயப்பா சேவை நிலையம் இயங்கி வருகிறது. கி.பி.1710ல் ஆண்ட ராமநாதபுரம் மன்னர் முத்துவிஜய ரெகுநாதசேதுபதியால் அமைக்கப்பட்ட இக்கிராமத்தில் ஐயப்பன் கோயில் அமைந்த இடத்தில் முன்பு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு தேவேந்திரன் பூஜை செய்த இடமாகவும், சங்கிலி சித்தர் தங்கியிருந்த பகுதியாகவும் இருந்துள்ளது.

ஆதி விநாயகர் கோயிலாக இருந்து, பின்னர் வல்லபை ஐயப்பன், மஞ்ச மாதா கோயிலாக வழிபாட்டில் இருந்துவருகிறது. தினமலர் நாளிதழில் வரும் உயிர் காக்க உதவுங்கள் என்ற நிகழ்விற்கு ஏராளமான பக்தர்களின் கூட்டுப்பிரார்த்னையுடன் அருட்பிரசாதமும், உதவித்தொகையும் பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பி வைத்து வருகிறோம். ரத்ததானம், கண்தானம் இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆதரவற்றோர், ஏழை முதியவர்களை வரவழைத்து புத்தாடை, இனிப்பு வழங்கி அவர்களுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது. உதவி செய்வோர் உள்ளத்தில் இறைவன் எப்போதும் அமர்ந்திருப்பான் என்றார்.

தொடர்புக்கு: 94437 24342.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar