Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நஞ்சை புளியம்பட்டி கரிவரதராஜ ... சபரிமலையில் 24 மணி நேரமும் பிரசாதம்: ஆன்லைனிலும் முன்பதிவு வசதி! சபரிமலையில் 24 மணி நேரமும் பிரசாதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2015
12:11

கரூர்: கார்த்திகை மாதம் முன்னிட்டு, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல விரதம் துவங்கினர். கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த, கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் சித்தரை விஷூ, மண்டல பூஜை, மகர சங்கரராந்தி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, சபரிமலை செல்பவர்கள் ஏராளமானவர்கள் கார்த்திகை மாதம் ஏராமானவர்கள் மாலை அணிவித்து செல்ல வருவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் கார்த்திகை, 1ம்தேதியை முன்னிட்டு அதிகாலை, 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பனுக்கு நெய், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருச்சி, கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், பழையஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு வந்து காவிரியில் புனித நீராடினர். பின், ஐயப்பனை வழிபட்டு விட்டு சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தனர். பக்தர்களுக்கு மாலையை குருக்கள் தங்கமணி, செங்குட்டுவேல் ஆகியோர் அணிவித்தனர். மேலும், 40 நாள் மண்டல உற்சவ நிகழ்ச்சியில் தினமும் காலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம், 11.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின், மீண்டும் மாலை, 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு, 8.30 மணிக்கு அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மண்டல உற்சவ நிறைவு நாள் வரும் டிசம்பர், 27ம் தேதி வரை நடக்கிறது. ஜனவரி, (தை 1ம்தேதி) 14ம் தேதி மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar