சபரிமலையில் 24 மணி நேரமும் பிரசாதம்: ஆன்லைனிலும் முன்பதிவு வசதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2015 12:11
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக வழிபாடு பிரசாதம் 24 மணி நேரமும் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். சபரிமலையில் முக்கிய வழிபாடு பிரசாதம் அப்பம், அரவணை. கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த பிரசாதம் தற்போது 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. 250 கிராம் எடை கொண்ட ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஏழு அப்பம் அடங்கிய ஒரு பாக்கெட் 25 ரூபாய்.இதற்கான கூப்பன்கள் பம்பையில் கணபதி கோயில் அருகே உள்ள தேவசம் கவுன்டர்களில் கிடைக்கும். சன்னிதானத்தில் 18-ம் படிக்கு வலது பக்கமும், மாளிகைப்புறம் கோயில் அருகே அன்னதான மண்டபம் எதிர்புறமும் உள்ள கவுன்டர்களில் வாங்கலாம். தனலெட்சுமி வங்கி கிளைகளிலும் இதற்கான கூப்பன்கள் கிடைக்கும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணையதளம் மூலமும் பிரசாதம் முன்பதிவு செய்ய முடியும். 160 மற்றும் 270 ரூபாய் மதிப்பில் இந்த பிரசாதம் முன்பதிவு செய்யப்படுகிறது. 160 ரூபாய்க்கு ஒரு டின் அரவணை, இரண்டு பாக்கெட் அப்பம், மஞ்சள், குங்குமம், விபூதி பிரசாதமாக கிடைக்கும். 270 ரூபாய்க்கு இரண்டு டின் அரவணை, நான்கு பாக்கெட் அப்பம், மஞ்சள், விபூதி, குங்குமம் கிடைக்கும்.